Wednesday, September 30, 2009

மூப்பெரும் இசை மேதைகள் ஒன்றாக கச்சேரி!


எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர். இவர்களின் இசைக் கச்சோ‌ரியை தனித்தனியே கேட்பதே பேரானந்தம். மூவரும் இணைந்து இசைக் கச்சே‌ரி நடத்தினால்? கற்பனை இல்லை மகா ஜனங்களே, நடக்கப் போகும் நிஜம்.
அக்டோபர் 9, 10, 11 ஆகிய தேதிகளில் பெப்சி தொழிலாளர்களின் அகில இந்திய மாநாடு நடைபெறுகிறது. சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டர் மற்றும் நேரு உள்விளையாட்டரங்கம் ஆகிய இடங்களில் இந்த மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மாநா‌‌ட்டை மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் தொடங்கி வைக்கிறார். அன்று மாலை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கமல், ர‌ஜினி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். மறுநாள் அதாவது 10 ஆம் தேதி மாலை நேரு உள்விளையாட்டரங்கில் எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிற இசையமைப்பாளர்கள் பங்கேற்கும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கயிருக்கிறது.

No comments: