Sunday, April 22, 2007

பைசா கோபுரம்

இத்தாலியின் பைசா நகரத்தில் உள்ள இந்த கோபுரம்.
1173-- ஆம் வருடம் கட்ட ஆரம்பிக்கப்பட்ட இந்த கோபுரத்தை வடிவமைத்தவர் யார் என்று சரியாகக் கூறமுடியாது. காரணம் இதன் கட்டுமானப் பணிகள் இருநூறு வருடங்களுக்குத் தொடர்ந்ததுதான். எனினும் முதலில் கட்டுமானப் பணியைத் தொடங்கியவர் & பொனானோ பிஸானோ.

நேராகக் கட்டப் பட்டுக் கொண்டிருந்த இந்தக் கட்டடம் கட்டும் போதே சாய்ந்த நிலக்குப் போனது

ஏழாவது மாடியில் இருந்து அளந்ததில் கிட்டத்தட்ட 4.4 மீட்டர் தூரத்திற்கு சாய்ந்திருக்கும் இந்த கோபுரம் கட்டப்பட்ட நிலத்தின் தன்மையால்தான் (60 சதவிகிதம் நீர் சேர்ந்த இந்தப் பகுதி மண்) சாயத் தொடங்கியது.

இந்த கோபுரத்தின் எடை 14,500 டன்கள்.

சுமார் ஐந்தரை டிகிரி கோணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தெற்கே நோக்கி சாய்ந்திருக்கிறது இந்தக் கோபுரம்.

கோபுரத்திற்குள் இருக்கும் சுழல் படிக்கட்டுகளின் மூலம் கோபுரத்தின் உச்சி வரை செல்ல அனுமதி உண்டு.

1173 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்ட இதன் கட்டுமானப் பணி மூன்றாவது மாடி கட்டப்பட்டுக் கொண்டிருந்தபோது 1178 ஆம் வருடம் பாதியில் நிறுத்தப்பட்டது.

அதன்பிறகு சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மறுபடி 1272 ஆம் வருடம் கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்பட்டது. இம்முறை ஏழாவது மாடி கட்ட ஆரம்பித்த போது 1278 ஆம் வருடம் நிறுத்தப்பட்டது.

மறுபடி 1360 ஆம் வருடம் தொடங்கப்பட்டது கட்டுமானப் பணிகள் தொடர்ந்து பத்து வருடங்கள் தடையின்றி நடக்க பைசா கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது.

கோபுர உச்சிக்குச் செல்ல அமைக்கப் பட்டிருக்கும் படிகள் 293
கோபுரத்தின் உயரம் 58.36 மீட்டர்கள்.

ஒவ்வொரு வருடமும் சாய்ந்து கொண்டே இருக்கும் இந்த கோபுரத்தை அவ்வப்போது நிமிர்த்த யாராவது முயற்சி செய்வண்டு. ஒருமுற 800 டன் எடை கொண்ட கற்கள் கோபுரத்தின் ஒரு பக்கம் நிறுத்தி, அதிலிருந்து கயிறு கட்டி கோபுரத்த நிமிர்த்தப் பார்த்தனர்.

இரண்டு வெவ்வேறு எடையுடைய பந்துகள் காற்றோ மற்ற குறுக்கீடுகளோ இல்ல என்றால் ஒரே நேரத்தில்தான் பூமியில் விழும் என்று கலிலியோ மக்களுக்கு எடுத்துச் சொன்ன பைசா கோபுரத்தின் உச்சியில் இருந்தான்.

No comments: