Sunday, August 23, 2009

மீண்டும் ஸ்ரீதேவி தமிழில்!


எண்பதுகளில் தமிழகத்தின் கனவுக்கன்னியாக கலக்கியவர் ஸ்ரீதேவி. உளியில் உயிர்பெற்ற சிலைபோன்ற உடலமைப்பு, இளசுகளின் இதயத்திற்கு வலைவீசும் கண்களென தேவதைக்கு உதாரணம் காட்டும் அழகில் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டார்.

தமிழிலிருந்து இந்திக்கு போனார், அங்கும் தனது கவர்ந்திழுப்பு நடிப்பால் ரசிகர்களின் மனசில் இடம்பிடித்தார். போனி கபூருடன் திருமணம் நடந்த பிறகு ஸ்ரீதேவியின் திரை தரிசனம் நின்றுபோனது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார் ஸ்ரீதேவி. 'மாப்பிள்ளை' படத்தின் ரீ-மேக்கில் தனுஷின் மாமி்யாராக நடிக்கவுள்ளார். இதுபற்றி இயக்குனர் சுராஜிடம் கேட்டபோது:-

"ரஜினி நடித்த 'படிக்காதவன்' பட டைட்டிலில் தனுஷை இயக்கினேன். அப்போது பேட்டி அளித் தனுஷ், 'ரஜினி டைட்டிலில் இனி ஒரு படத்தில் மட்டும் நடிப்பேன். அதன்பிறகு நடிக்க மாட்டேன்' என்றார். அந்த ஒரு படம்தான் 'மாப்பிள்ளை'. ஹீரோயினாக ஹன்ஸிகா மோத்வானி அறிமுகமாகிறார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகை.

மாமியார் ஸ்ரீவித்யா கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியை நடிக்க கேட்டிருக்கிறேன். அவரிடம் கதை சொன்னேன். பிடித்திருப்பதாக கூறினார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். மாமியார்-மருமகனுக்கு இடையே நடக்கும் மோதல்தான் கதை.

80 இறுதிவாக்கில் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது வந்த 'சாந்தினி' என்னும் ஹிந்திப் படத்தில் ஸ்ரீதேவி ஆடிய ஒரு பாடல் காச்சியை அப்போது திரும்பதிரும்ப பார்த்ததுதான் ஞாபகம் வருகின்றது.

அப்படி என்ன பாடல் காட்சி என்று நீங்களும் தான் பாருங்களேன்...

ஸ்ரேயா... அது என்ன சைஸ் ஜீரோ???


மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலைப் போக்கிக் கொள்ள கோவை ஆசிரமத்தில் தங்கி யோகா கற்பதாகவும், தன்னை சைஸ் ஜீரோ அழகி என்று மற்றவர்கள் கூறுவதில் உண்மையில்லை என்றும் நடிகை ஸ்ரேயா கூறினார்.


கந்தசாமி படம் சென்னையில் வெளியானபோதும், அது தொடர்பான நிகழ்ச்சி எதிலும் ஸ்ரேயா பங்கேற்கவில்லை.


அவர் எங்கே இருக்கிறார் என்று தேடியபோது, கோவை ஆசிரமத்தில் தங்கி யோகாவில் ஈடுபட்டிருப்பதாகத் தெரியவந்தது. பின்னர் செய்தியாளர்களைத் தொடர்பு கொண்ட அவர் கூறியதாவது:நான் நடித்த கந்தசாமி படம் வெளியாகியுள்ளது, பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. அந்தப் படத்துக்காக ரொம்பவே கஷ்டப்பட்டேன்.படத்தை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை. ரசிகர்களுடன் அமர்ந்து அந்தப் படத்தைப் பார்க்கப்போகிறேன்.எனது அடுத்த படங்கள் குட்டி மற்றும் ஜக்குபாய். இந்த இரு படங்களுமே நல்ல வெற்றியைப் பெறும். எனக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தரும்.என்னை சைஸ் ஜீரோ அழகி என்பதில் உண்மையில்லை. அதற்காக நான் முயற்சிக்கவுமில்லை. இயல்பாகவே என் உடல்வாகு அப்படி.நான் தற்போது கோவை ஆசிரமத்தில் இருக்கிறேன். அங்கு தியானம், யோகா போன்றவற்றை கற்கிறேன். எனக்கு பல காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுவது உண்டு. யோகா, தியானம் கற்ற பிறகு அது இல்லை. மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆசிரமத்தில் தொடர்ந்து இருப்பேன் என்றார்.

கமலின் 50 ஆண்டு திரைவாழ்க்கை!


கடந்த 12 ஆம் தேதி கமல் திரைத்துறைக்கு வந்து ஐம்பதாண்டுகள் நிறைவு பெற்றது. விழா இல்லை, வாழ்த்து போஸ்டர்களில்லை, பூமாலைகளில்லை... சுருக்கமாகச் சொன்னால், எதுவுமில்லை.

ஆடிக் காற்றிலும் கோழித் தூக்கம்போடும் கோடம்பாக்கம் இதிலும் குறைட்டை விடுகிறதோ என்று பலருக்கும் சந்தேகம். ஆனால், அப்படியெல்லாம் இல்லை என்று உணர்த்தியிருக்கிறார்கள்.

கமலின் பொன் விழாவையொட்டி விஜய் டிவி ஆறு வாரங்கள் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகள் நடத்துகிறது. முதலில் கமல் பேருந்து தமிழகம், பாண்டி‌ச்சே‌ரி மற்றும் பெங்களூருவை வலம் வரும். இந்த பேருந்தில் கமலின் அ‌ரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கும்.

அடுத்து இலக்கியவாதிகள் பங்குபெறும் கருத்தரங்கு மதுரையில் நடைபெறும். கருத்தரங்கின் தலைப்பு, கமலும் தமிழும். திரைப்படங்களில் கமல் கையாண்ட வெ‌வ்வேறு வட்டார வழக்குகள் குறித்து இதில் விவாதிக்கப்படும்.

கோயம்புத்தூரில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் கமல் படங்களின் ஹிட்ஸ் மட்டும் இடம்பெறும். சென்னையில் கமல் திரைப்பட விழாவை மூன்று வாரங்கள் சத்யம் சினிமாசுடன் இணைந்து நடத்தவும் திட்டமிட்டுள்ளது, விஜய் டிவி.

அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் உச்சகட்டமாக பிரமாண்ட விழா நடைபெறுகிறது. இந்திய திரையுலகைச் சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள் அனைவரும் இதில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிமுக விழாவில் பேசிய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், கமலின் அலுவலகம் அமைந்துள்ள எல்டாம்ஸ் சாலையின் பெயரை டாக்டர் கமல்ஹாசன் சாலை என மாற்ற முதல்வ‌ரிடம் நடிகர் சங்கம் சார்பில் கோ‌ரிக்கை வைக்கப்படும் என தெ‌ரிவித்தார்.

இனிய ஒரு பாடல்...