Friday, December 30, 2011
Sunday, September 18, 2011
Tuesday, September 13, 2011
Monday, September 5, 2011
Thursday, January 13, 2011
தேவலீலை - திரைப்படம்
முதல் பாவம் புகழ் அபிலாஷா நடித்த கானகசுந்தரிக்குப்பிறகு ரிலீஸ் ஆகி இருக்கும் அஜால் குஜால் படம் தான் இந்த தேவலீலை,கதை இல்லாத படம்தான்,ஆனா சீனுக்காக! பார்த்துத்தொலைக்க வேண்டி இருக்கு
. கதையோட ஒன்லைனை கேட்டா அசந்துடுவீங்க,குருவிடம் போர்க்கலைகளை கற்கும் வில்லங்க சீடன் குருவையே கொல்கிறான்.இறக்கும்போது ஒரு தேவ ரகசியத்தை சொல்லிவிட்டு இறக்கிறார் குரு.அதாகப்பட்டது கிழக்கு,மேற்கு,வடக்கு என 3 திசைகளிலும் 3 ஃபிகர்கள் உண்டு.குறிப்பிட்ட 3 பேரையும் வெர்ஜினிட்டி மைனஸ் செய்தால்(அதாங்க கன்னி கழித்தல்)உலகையே வெல்லும் சக்தி கிடைக்குமாம்.அதற்குத்துணையாக ஒரு சீடனையும் கூட்டிகொள் என்கிறார் குரு.சிஷ்ய வில்லன் 3 பேரை அடைந்தானா ,மேட்டரை முடித்தானா என்பதை வெண் திரையில்
மணிரத்தினமும், இளையராஜாவும் மீண்டும் இணைகின்றனர்
திரும்ப திரும்ப தோற்றாலும், விரும்பி விரும்பி தன்னை பேச வைக்கிற இயக்குனர்களில் முக்கியமானவர் மணிரத்னம். அகில இந்திய இயக்குனர் என்ற அந்தஸ்தை அடைந்தபின் அவரது கதைகளில் மண்ணும் இல்லை. மணமும் இல்லை! இந்த எண்ணத்தை அடித்து நொறுக்குகிற மாதிரி ஒரு படம் எடுக்கப் போகிறாராம் அவர்.
பலரும் முயன்று தோற்ற முயற்சிதான் இதுவும். அதாவது கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை படமாக்கப் போகிறாராம் மணி. இது தொடர்பாக இலக்கிய மேதை ஜெயமோகனுடன் டிஸ்கஷன் நடத்திக் கொண்டிருக்கிறார். சரித்திர படங்களை இப்போது மட்டுமல்ல, எப்போதுமே சாதாரண பட்ஜெட்டில் எடுத்துவிட முடியாதல்லவா? இந்த படத்திற்கான பட்ஜெட் 600 கோடியை தொடும் என்கிறார்கள்.
இவ்வளவு பெரும் தொகையை இறக்கக் கூடிய சக்தி கொண்ட ஒரே நிறுவனம் சன் பிக்சர்ஸ்தான் என்பதால் அவர்களுடன் கூட்டு சேரப்போகிறாராம் மணிரத்னம். இவரது இன்னொரு பெருமைக்குரிய கூட்டு இசைஞானி இளையராஜா! பல காலமாக பிரிந்திருந்த இவ்விருவரையும் இணைத்து வைக்கப் போகிறார் அமரர் கல்கி!
Tuesday, January 4, 2011
Subscribe to:
Comments (Atom)


